சனி, 5 செப்டம்பர், 2009

சுப்ரீம் தொலைக்காட்சி - ஒரு பார்வை

பிரெஞ்சிந்தியாவின் ஜன்னல் என்று பண்டித ஜவஹர்லால் நேருவால் வர்ணிக்கப்பட்ட பெருமைக்குரிய பகுதி நம் புதுச்சேரி. இயற்கை எழில் கொஞ்சும் வங்கக்கடலோரத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில், ஆரோவில், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, அருங்காட்சியகம், சுண்ணாம்பாறு, அரிக்கமேடு, கீழுர் என்று பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கொண்டு அமைதி பூமியாகவும், ஆன்மீக பூமியாகவும் விளங்கி வருகின்றது. நீண்ட, நெடிய அரசியல் வரலாற்றைக் கடந்து இன்றளவும் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களும், பல்வேறு மொழி பேசும் மக்களும் ஒரு தாய் பிள்ளைகளாய் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் புண்ணிய பூமியாய் விளங்கி வருகிறது புதுச்சேரி.

இத்தகைய பல்வேறு சிறப்புகளைப் பெற்ற புதுச்சேரியின் புகழை பறைசாற்றும் வகையிலும், புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்வுகளை மக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தவும், கலை, இலக்கியம், மருத்துவம் என்று அனைத்துத் துறைகளிலும் மக்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்திலும் சுப்ரீம் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. செய்திகள், கலை, இலக்கியம், மருத்துவம், வணிகம், மகளிர் மேம்பாடு, ஆன்மீகம், பொழுதுபோக்கு என்று அனைத்து அம்சங்களைக் கொண்ட பயனுள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி சுப்ரீம் டி.வி. புதுச்சேரி மக்களின் மனதில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ளது.

எமது தொலைக்காட்சி பற்றிய தகவல்கள், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள், புதுச்சேரியில் நடைபெறும் அன்றாட செய்திகள் ஆகியவற்றை உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் நோக்கத்தில் இந்த புதிய வலைப்பதிவு (supremetelevision.blogspot.com) தொடங்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்கி எங்களை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
நிர்வாகி,
சுப்ரீம் தொலைக்காட்சி
159, முதல் தளம், மிஷன் வீதி,
புதுச்சேரி - 1.தொலைபேசி: 0413-2226989.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக